Thursday, November 5, 2009

இந்திய தேசத்து இளைஞர்களே!



பாரதத்தாயின் தவப்புதல்வர்களுக்கு வணக்கம்.
சாதிக்க முயலும் நமக்கு எதற்கு சாதி சங்கங்கள்.சிந்திக்க தெரிந்த நம்மால் எதையும் சாதிக்கமுடியும்.முடியாது என்ற வார்த்தையை தூக்கி எறிவோம்.முன்னுக்கு வர முடியவில்லையே என்று மூலையில் முடங்கிக்கொண்டு ஒப்பாரி வைக்காமல் ஓங்கி குரல் கொடுப்போம்.நம் குரல் இனிமையுடன் வலிமையையும் சேர்த்துக் கொள்வோம்.நமது திறமை வெளிச்சத்துக்கு வரும்.

நமது முயற்சியை தீவிரத்துடன் காட்டுவோம்!தீவிரவாதம் வேண்டாம் நமக்கு.தீவிரவாதம் தான் வழி என்றால் புத்தனும்,காந்தியும் ஏன் பிறந்தார்கள்.அகிம்சையால் அவர்கள் சாதிக்காத எதை நாம் தீவிரவாதத்தால் சாதிக்கப்போகிறோம்.நம் நாடு இளைஞர்களை என்றுமே இழந்து விட நினைப்பதில்லை, தீவிரவாதியாய் இருந்தாலும் திருந்திவிடுவான் என்ற நம்பிக்கையில்.

நமது ஒவ்வொரு செயலும் இந்தியத்தாயின் எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டுமே தவிற எதிர்ப்புடன் இருக்கவேண்டாம்.சாக்கடை ஓடும் இடத்தில் கூட நாம் கூட்டத்தை கூட்டுவோம்.சாக்கடையும் சுத்தமாகும்,நம் சிந்தனையும் வெற்றியாகும்.

அரசியல்வாதிகள் கூட்டும் வீண் கூட்டங்களில் நாம் தலையை காட்ட வேண்டாம்.அவர்களுக்கு நம் நிலையை காட்டுவோம்.பிரச்சினைக்குரியவர் எவர் பின்பும் நாம் செல்லாமல் அவர்களுக்கு முன் சென்று அவர்களின் முயற்சியை முறியடிப்போம்.

பிறர் பெயரை எழுத கற்றுக்கொண்ட நாம்,நம் பெயரை பிறர் எழுத கற்றுக்கொடுப்போம்.இதுவே நாம் ஏந்தும் முதல் ஆயுதம்.இது குறிவைத்த இடத்தயும் தாக்கும்,குறி வைக்காத இடத்தையும் தாக்கும்.எழுது கோலினால் இலக்கியம் மட்டுமல்ல, இதிகாசம் மட்டுமல்ல, இந்தியாவின் சரித்திரத்தையே மாற்ற முடியும்.

நம் இந்தியத்தாயின் பெயரை களங்கடிக்கும் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கப்புறப்படுவோம்.நம் முயற்சி முறியடிக்கப்படும் போது முகம் சுழிக்க வேண்டாம்.முன்னோக்கி செல்வோம்,நம்மை தடுப்பவர்களின் அராஜகத்தை தகர்ப்போம்.புறப்படுங்கள் இளைஞர்களே!  இனி மேலாவது மானுடத்தை நம்புவோம்!மனிதத்தை மதிப்போம்!மனிதநேயம் கொள்வோம்!அன்பு என்னும் ஜோதி அணையாமல் காப்போம்!வாழ்க பாரதம்!வளர்க தமிழ்!
ஜெய்ஹிந்த்!                          


Friday, October 30, 2009

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு(உள்ளக்குமுறள்)

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்!

என்னைப்போன்றே குடும்பபாரம் சுமக்கவேண்டி அயல்நாடுகளில் அல்லல் படும் அத்தனை பேரின் சார்பாக என் உள்ளக்குமுறள்

திரைகடலோடியும் திரவியம் தேடு!தேடி வந்த நாங்கள் தொலைத்தது எத்தனையோ!விசா விற்கும் வியாபாரிகளின் வீர வசனத்தை நம்பி வளைகுடா வந்து ஆண்டுகள் ஐந்தாகிவிட்டது.இன்னும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டிருக்கிறோம்.

வயதில் முதிர்ந்த தாய்,தந்தையற்கு துணையாய் நாங்கள் விட்டு வந்தது அவர்களை விட்டு என்றும் பிரியமறுக்கும் நோயை மட்டுமே!வாழ்க்கை துணையாய் வாய்த்த மனைவிக்கு வாழ்க்கையில் துணையாய் வாழ வக்கில்லாமல் இல்லறவாழ்க்கைக்கு ஏங்கித்தவிக்கும் எங்களால்,கணவன் இருந்தும் கைம்பெண்ணாய்,புகுந்த வீட்டிலேயே வாழாவெட்டியாய்,கணவன்,குழந்தையென்ற வாழ்க்கை கனவுகளை கண்களில் சுமந்து கொண்டு குழந்தை ஆசையில் அடிக்கடி அடிவயிற்றில் கையை வைத்துப்பார்க்கும் அந்த அபலைப்பெண்ணின் இழந்த வாழ்க்கையை ஈடு செய்யமுடியுமா எங்கள் திரைகடல் ஓடி தேடிய திரவியத்தால்?

தாயை ,தந்தையை,மனைவியை,குழந்தையை மனதில் தினமும் நினைத்து நினைத்து என்னடா வாழ்க்கை இந்த வேதனை வாழ்க்கை வேண்டுமா என்று மனதுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறோம்!

அன்பினால் பெற்றெடுத்து ஆசை ஆசையாய் எங்களை வளர்த்த தாய்க்கும்,தந்தைக்கும் அருகே இருந்து பாசம் கலந்த பணிவிடை செய்யும் பாக்கியம் இல்லாத பாவிகள் நாங்கள்.

என்னடா வாழ்க்கை இது?இல்லறமா?துறவறமா?இனம் காண முடியாத வேதனையும் சோதனையும் நிறைந்த வெளிநாட்டு வாழ்க்கை தேவைதானா?என்று எங்களையே கேட்டுக்கொண்டு பின் குடும்பத்தின் வறுமையை நினைத்து எங்களை நாங்களே சமாதானப்படுதிக்கொள்ளும் அப்பாவி துரதிருஷ்டசாலிகள் நாங்கள்.எந்த நேரமும் ஏசி அறையில் இருந்தாலும் உள்ளம் மட்டும் தனிமைதணலில் புழுங்கிப்போவது யாருக்கு தெரியும். நாங்கள் கல்யாணம் பண்ணிய பிரமச்சாரிகள்!

தனியா தாகத்தோடு விரக்தியும் வேதனையும் கலந்த சோகம்தான் எங்கள் சொந்தம்!இனி என்று வரும் எங்கள் வாழ்வில் வசந்தம் என்று ஏக்கமுடன் காதிருக்கிறோம்!

பாலிய(ல்) பலாத்க்காரம்

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்! என்று பாரதி யாரை மனதில் நினைத்து பாடினானோ?தெரியவில்லை.இன்று நம் சமுதாயத்தில் மனித மாண்பை குலைக்கும் விதமாக நடக்கும் வெறிச்செயல்களில் இந்த பாலியல் பலாத்க்காரத்தில் ஈடுபடும் காட்டு மிராண்டி கூட்டங்களை பார்க்கும் போது எனக்கு அப்படித்தான் பாட தோன்றுகிறது.கடந்த சில நாட்களாக வரும் இத்தகைய செய்திகளை பார்க்கும்போது இதயம் ஒரு முறை நின்று மீண்டும் துடிக்கிறது.பெற்ற மகள்,பச்சிளம் குழந்தை என்றெல்லாம் பார்க்காத இந்த காட்டு மிருகங்களை என்னவென்று சொல்வது.

குழந்தையும் தெய்வமும் ஒன்றென்றால் அந்த தெய்வத்தையே கற்பழிக்கும் தெருபொறிக்கி நாய்கள்,பிணம் தின்னும் கழுகுகள்,இரத்த வெறி பிடித்த காட்டு ஓநாய்கள்,இத்தகைய இழி பிறவிகள் காட்டு விலங்குகளை காட்டிலும் கட்டுப்பாடற்றவை.தாய்,தமக்கை,தங்கை என்ற தராதாரம் இந்த ஜென்மங்களுக்கு இல்லை.

இனி அடுத்து பிறக்கப்போகும் பெண் சிசுக்கள் கூட துணி உடுத்தி பிறக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு நம் சமுதாயம் தள்ளப்பட்டிருக்கிறது.பாலிய திருமணத்தை தடுத்து விட்ட நம்மால் ஏன் இந்த பாலியல் பலாத்காரங்கலை தடுக்க முடியவில்லை.

அழுகின்ற குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்களின் முந்தானை விலகலையும் முறைத்துப் பார்க்கும் இந்த முறைகெட்ட முரடர்களை பார்த்து அவர்களை படைத்தவனே எண்ணி தலைகுனிவான்.இவர்களை படைத்ததை நினைத்து வேதனைப்படுவான்.துள்ளித் திரியும் இந்த புள்ளிமான் குட்டிகளை வேட்டையாடும் காட்டு ஓநாய்களிடமிருந்து காப்பாற்ற முடியாத கடவுள் எங்கே?காவல் துறை எங்கே?

சிந்தித்து பாருங்கள் சினேகிதர்களே! சிறு மதி படைத்த சில மனிதக்கூட்டம் மனித மான்பை சிதைத்து,மனிதப்பண்பை மண்மூடி புதைத்துக்கொண்டிருக்கிறது.புறப்படுங்கள் இளைஞர்களே!தாய் நாட்டயும்,தாய்குலத்தையும் காப்பதற்கு!

Wednesday, October 28, 2009

கொஞ்சம் சிந்தியுங்கள்.

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்.தட்டு தடுமாறி வலைப்பூ ஆரம்பித்துவிட்டேன்.ஆனால் என்ன எழுதுவது எதைப்பற்றி எழுதுவது!குழப்பம்,தயக்கம்!இறுதியாக என்னையும்,என் எழுதுக்களையும் ஒருமுகப்படுத்தி  என் கிறுக்கல்களை ஆரம்பித்துவிட்டேன்.தவறு இருந்தால் தலையில் குட்டுங்கள்.திருத்திக் கொள்கிறேன்!பிடித்திருந்தால் முதுகில் தட்டிக்கொடுங்கள்!வளர்கிறேன். 

இன்றைய உலகில் மனிதன்(சில) தன் கல்வி தரத்தை இழந்து விட்டான்.தன் வாழ்க்கை தரத்தை துறந்து விட்டான்.தரம் கெட்ட இந்த சமுதாயத்தில் இன்னும் தரமுடன் இருப்பது மதவெறியும்,சாதி வெறியும் தான்.இயந்திரத்தை வைத்துக்கொண்டு தினமும் ஒரு நாடகம் நடத்துகின்றான்.இவர்களின் வெறியாட்டத்துக்கு எரிவது பேருந்துகளும்,கடைகளும்,பாதிக்கப்படும் அப்பாவி மக்களின் வயிறும் தான்.

சாதி மத பிரச்சினையில் நுழைந்து விட்ட மனிதனால்,தன் வாழ்க்கை பிரச்சினயில் நுழைய முடியவில்லை.இவர்கள் மதத்தை நேசிக்கும் மனிதர்கள்.சாதியை நேசிக்கும் மனிதர்கள்.நம் தாய்திரு நாட்டை நேசிக்காத மனிதர்கள்.அயல் நாடுகளோ விஞ்ஞானத்துறையில் முன்னேறிக்கொண்டிருக்க, நம் நாடோசாதி,மத பிரச்சினைகளில் முன்னேறிக்கொண்டிருக்கிறது.தினமும் கொலையும்,கொளுத்தல்கலும் பெருகிக்கொண்டிருக்கிறது.

நாம் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்.சிலை வைப்பதும்,பெயர் சூட்டுவதும் அரசியல்வாதிகளின் வேலை.கடவுளின் பெயரால் கலகம் செய்வது ஆன்மீகவாதியின் வேலை.நாம் இதை ஒரு போதும் உணர்வதில்லை.நாம் அனைவரும் இந்தியநாட்டின் குடிமக்கள்.நமக்குள் ஏன் இந்த குலம் கானும் பேதம்.வேண்டாம்,வேண்டவே வேண்டாம்.நாம் எந்த மதத்தில் இருந்தாலும் அது நல்லதையே போதிக்கிறது.

நாம் சிறுபாண்மையினராய் இருந்தாலும் சரி,பெரும்பான்மையினராய் இருந்தாலும் சரி,மொத்தத்தில் பெருந்தன்மை உள்ளவர்களாய் இருப்போம்!இந்தியாவின் விடிவை நோக்கிக் காத்திருப்போம்!
        
                                      வாழ்க தமிழ்!வளர்க பாரதம்!

Monday, October 26, 2009

கிழங்கில் இருக்கும் மருத்துவ குணம்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு: சத்துக்குரைவான உணவைஉண்பதால் ஏற்படும் சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்.ஆனால் அதே சமயம் அதிகமாக உண்டால் சிலருக்கு வாதத் தொல்லைகலை ஏற்ப்படுத்தும்.

கருணைக்கிழங்கு: அஜீரணத்தை அகற்றி நல்ல பசியை உண்டாக்கும்.மற்றும் வாதசூலை,குண்மநோய் கிருமிகள்,வாதம்,பித்தம் போன்றவற்றால் ஏற்படும் நோய்களை போக்கும்.

அமுக்கிரா கிழங்கு: கட்டிகளின் காரணமாக உடலில் ஏற்படும் வீக்கங்களை கரைத்து குண்ப்படுத்தும்.இதை பாலில் நன்கு வேக வைத்து உலர்த்தி பின் இடித்து அத்துடன் கற்கண்டு சேர்த்து பாலில் போட்டு காய்ச்சி குடித்தால் தாதுபுஷ்டி ஏற்படும்.

தாமரை கிழங்கு: இக்கிழங்கு கண்களில் தோன்றும் குறைபாடுகளை போக்கப்பயண்படுகிறது.தவளைச்சொறி,உடல்வலி,பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் போன்றவற்றையும் குணப்படுத்த வல்லது.

முள்ளங்கி கிழங்கு: இருமல்,ஜலதோஷம்,தலைவலி,கபம்,சுவாசக்கோளாறு,குன்மம்,மூலக்கடுப்பு போன்ற குறைப்பாடுகளையும் குணமாக்கும்.

பனங்கிழங்கு: பித்தமேகம்,அஸ்திசூடு, ஆகியவற்றை நன்கு குண்ப்படுத்தும்.உடல் குளிர்ச்சி உண்டாக்கும்.

சின்னக்கிழங்கு: இருதயநோய்,ஆஸ்துமா, போன்ற பிணிகளுக்கு நல்ல மருந்து.

வெற்றிலைவள்ளிக் கிழங்கு: உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து தரக்கூடியது.பாண்டுரோகம் குணமாகும்.சிலருக்கு இக்கிழங்கு வாயு தொல்லைகலை உருவாக்கக்கூடும்

Friday, October 23, 2009

புத்தரின் விஸ்வரூபம்


தண்ணீர் கிடைத்தது

கி.பி 1141-ம் ஆண்டு முதலாம் நரசிம்மன் என்ற மன்னன் மைசூரைஆண்டான்.அவன் காவிரியில் அணை கட்டி தமிழ் நாட்டுக்கு தண்ணீர் வராமல் தடுத்தான்.அப்போது சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜன் மைசூர் மேல் படையெடுத்து போய் அணையை உடைத்து காவிரியை விடுவித்தான்.

அதே போல் 17-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட சிக்கதேவராயர் என்ற மன்னனும் காவிரித் தண்ணீரை மறித்தான். அப்போது திருச்சியில் இருந்த ராணி மங்கம்மா, காவிரியை மீட்க படையுடன் கிளம்பினாள்.பயந்து போன மன்னன் உடனே காவிரியை திறந்துவிட்டான்.

இந்தியா விடுதலை அடைந்தபின் மைசூரில் அனுமந்தப்பா என்ற திவான் அணைகளை அடைத்து தமிழ் நாட்டுக்கு தண்ணீர் வராமல் தடுத்தார். அப்போது தலைவர் காமராஜர் அணைகளை உடனே திற்ந்து விடுங்கள் ! இல்லையேல் ராணுவ உதவியுடன் அணைகளை திறப்போம் என்று எச்சரித்தார்.உடனே மைசூர் அரசு அணைகளை திறந்து விட்டது.

லேப்டாப்பின் (மறுப்பக்கம்)பயன்கள்

Thursday, October 22, 2009

தமிழ் இலக்கியம்

திருநெல்வேலி சரித்திரம் என்னும் வரலாற்று நூலை எழுதியவர் யார்?
டாக்டர் கால்டுவெல்.
ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்று பாடியவர் யார்?
திருமூலர்.
பெரிய புராணத்திரற்கு சேக்கிழார் வைத்த பெயர் என்ன?
திருத்தொண்டர் புராணம்.
நாடகக்காப்பியம் என்ற நூல் ?
சிலப்பதிகாரம்.
மன்னர்களை மட்டுமே பாடும் சங்க கால நூல் எது?
பதிற்றுப் பத்து.
சங்க புலவர்களுக்கு எங்கு தனிக் கோயில் உள்ளது?
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.
தேம்பாவனி எங்கு இயற்றப்பட்டது?
மதுரை.
மதுரைக்கலம்பகம் என்ற நூலை எழுதியவர் யார்?
குமரகுருபரர்.
கொல்லிமலைப் பகுதியை ஆண்டு வந்த மன்னன் யார்?
ஓரி.
ராஜராஜன் விருது வழங்கும் பல்கலை கழகம் எது?
தஞ்ஞை தமிழ் பல்கலைகழகம்.
தொல்காப்பியதிற்கு முதன்முதல் உரைஎழுதியவர் யார்?
இளம்பூரனர்.
திருக்கழுகுன்றப் புராணம் என்ற நூலை எழுதியவர்?
அந்தகக்கவி வீரராக முதியார்.
பூதத்தாழ்வார் பிறந்த ஊர் எது?
மாமல்லபுரம்.
திருவிலையாடல் புராணம் எழுதப்பட்ட காலம் எது?
16 ம் நூற்றாண்டு.

பூக்களில் இருக்கும் மருத்துவ குணங்கள்

மல்லிகைப்பூ; தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் மார்பில் பால் கட்டிவிட்டால் மல்லிகை பூக்களை மார்பில் வைத்து கட்டினால் கட்டிய பால் கரைந்து விடும்.
ரோஜாப்பூ; ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
தாமரைப்பூ; தாமரைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வர நரை,திரை,மூப்பு ஆகிய மூன்றும் வராது.
வேப்பம்பூ;கொதிக்கும் நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி,காது வலி நீங்கும்.
அரளிப்பூ; தலையில் வைத்து கொண்டால் பேன் ஒழியும்.
சூரியகாந்திப்பூ; சூரியகாந்தி எண்ணை மிகவும் நல்லது. இதய நோய் உள்ளவர்கள் இதன் எண்னையை பயன் படுத்தலாம்.
செம்பருதிப்பூ; முடி உதிர்வதை தடுக்கவும்,கண் எரிச்சலை போக்கவும் பயண்படும்.

Search This Blog