நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்! என்று பாரதி யாரை மனதில் நினைத்து பாடினானோ?தெரியவில்லை.இன்று நம் சமுதாயத்தில் மனித மாண்பை குலைக்கும் விதமாக நடக்கும் வெறிச்செயல்களில் இந்த பாலியல் பலாத்க்காரத்தில் ஈடுபடும் காட்டு மிராண்டி கூட்டங்களை பார்க்கும் போது எனக்கு அப்படித்தான் பாட தோன்றுகிறது.கடந்த சில நாட்களாக வரும் இத்தகைய செய்திகளை பார்க்கும்போது இதயம் ஒரு முறை நின்று மீண்டும் துடிக்கிறது.பெற்ற மகள்,பச்சிளம் குழந்தை என்றெல்லாம் பார்க்காத இந்த காட்டு மிருகங்களை என்னவென்று சொல்வது.
குழந்தையும் தெய்வமும் ஒன்றென்றால் அந்த தெய்வத்தையே கற்பழிக்கும் தெருபொறிக்கி நாய்கள்,பிணம் தின்னும் கழுகுகள்,இரத்த வெறி பிடித்த காட்டு ஓநாய்கள்,இத்தகைய இழி பிறவிகள் காட்டு விலங்குகளை காட்டிலும் கட்டுப்பாடற்றவை.தாய்,தமக்கை,தங்கை என்ற தராதாரம் இந்த ஜென்மங்களுக்கு இல்லை.
இனி அடுத்து பிறக்கப்போகும் பெண் சிசுக்கள் கூட துணி உடுத்தி பிறக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு நம் சமுதாயம் தள்ளப்பட்டிருக்கிறது.பாலிய திருமணத்தை தடுத்து விட்ட நம்மால் ஏன் இந்த பாலியல் பலாத்காரங்கலை தடுக்க முடியவில்லை.
அழுகின்ற குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்களின் முந்தானை விலகலையும் முறைத்துப் பார்க்கும் இந்த முறைகெட்ட முரடர்களை பார்த்து அவர்களை படைத்தவனே எண்ணி தலைகுனிவான்.இவர்களை படைத்ததை நினைத்து வேதனைப்படுவான்.துள்ளித் திரியும் இந்த புள்ளிமான் குட்டிகளை வேட்டையாடும் காட்டு ஓநாய்களிடமிருந்து காப்பாற்ற முடியாத கடவுள் எங்கே?காவல் துறை எங்கே?
சிந்தித்து பாருங்கள் சினேகிதர்களே! சிறு மதி படைத்த சில மனிதக்கூட்டம் மனித மான்பை சிதைத்து,மனிதப்பண்பை மண்மூடி புதைத்துக்கொண்டிருக்கிறது.புறப்படுங்கள் இளைஞர்களே!தாய் நாட்டயும்,தாய்குலத்தையும் காப்பதற்கு!
0 கருத்துரைகள்:
Post a Comment